search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டைக்கு நாளை முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கம்
    X

    மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டைக்கு நாளை முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கம்

    நாளை முதல் சென்னை மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை வழித்தடத்தில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டைக்கு இதுவரை 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி நாளை(திங்கட்கிழமை) முதல் இந்த வழித்தடத்தில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்படும்.

    இந்த ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20, 12.40 மற்றும் மாலை 6 மணிக்கும், சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 6.40, மாலை 3.10 மற்றும் இரவு 8.30 மணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10.50 மணிக்கும், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×