என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாசரேத் பகுதியில் ஏற்படும் மின் தடையை நீக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு
நாசரேத்:
நாசரேத் பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி, மணிநகர், வகுத்தான் குப்பம், வாழையடி, நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தினமும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நாசரேத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நுற்பாலை மூடிய பின்பு தொழில்கள் மற்றும் வியாபாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
இந்த நிலையில் தினமும் மின் தடையும் ஏற்படுவதால் வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரஞ்சன் கூறியதாவது:-
நாசரேத் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகலில் வெயிலின் கொடுமையும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாசரேத் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ம.தி.மு.க. கண்டனம் தெரிவிப்பதோடு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
எனவே இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படாதவாறு செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்