search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத் பகுதியில் ஏற்படும் மின் தடையை நீக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு
    X

    நாசரேத் பகுதியில் ஏற்படும் மின் தடையை நீக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

    நாசரேத் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.

    நாசரேத்:

    நாசரேத் பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி, மணிநகர், வகுத்தான் குப்பம், வாழையடி, நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தினமும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நாசரேத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு நுற்பாலை மூடிய பின்பு தொழில்கள் மற்றும் வியாபாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

    இந்த நிலையில் தினமும் மின் தடையும் ஏற்படுவதால் வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஆழ்வார்திருநகரி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரஞ்சன் கூறியதாவது:- 

    நாசரேத் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகலில் வெயிலின் கொடுமையும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.

    இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாசரேத் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ம.தி.மு.க. கண்டனம் தெரிவிப்பதோடு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

    எனவே இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படாதவாறு செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×