search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் போதையில் மனைவியை வெட்டிய கணவர் கைது
    X

    கொடைக்கானலில் போதையில் மனைவியை வெட்டிய கணவர் கைது

    கொடைக்கானல் அருகே போதையில் மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 45). இவரது மனைவி சுசிலா (வயது 41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காமராஜ் தினமும் குடித்து விட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    குடும்ப செலவுகளுக்காக சுசிலா கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த சுசிலாவிடம் காமராஜ் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.

    அவர் பணம் தர மறுக்கவே காமராஜ் அரிவாள் மனையால் தனது மனைவியை வெட்டினார். படுகாயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசில் சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×