என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் போதையில் மனைவியை வெட்டிய கணவர் கைது
Byமாலை மலர்27 May 2018 5:40 PM GMT (Updated: 27 May 2018 5:40 PM GMT)
கொடைக்கானல் அருகே போதையில் மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெருமாள்மலை:
கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 45). இவரது மனைவி சுசிலா (வயது 41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காமராஜ் தினமும் குடித்து விட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
குடும்ப செலவுகளுக்காக சுசிலா கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த சுசிலாவிடம் காமராஜ் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.
அவர் பணம் தர மறுக்கவே காமராஜ் அரிவாள் மனையால் தனது மனைவியை வெட்டினார். படுகாயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசில் சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X