search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
    X

    மதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

    வேலை கிடைக்காத விரக்தியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பேரையூர் ஜே.ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது 42). இவருக்கு பாண்டிசெல்வி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஜெயபிரகாசுக்கு வேலை இல்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஜெயபிர காசுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டுக்குள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டி செல்வி பேரையூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×