என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் மேலும் 2 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்25 May 2018 7:33 AM GMT (Updated: 25 May 2018 8:42 AM GMT)
சென்னையில் இன்று மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #ChennaiMetro #CMOpenMetro
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நிறைவேற்றப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல்- கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை ஒரு வழியாகவும், சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மார்க்கமாக மற்றொரு வழியாகவும் செயல்படுத்தப்படுகிறது.
உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை என 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் திட்டம் முதன் முதலாக கோயம்பேடு- அசோக்நகர் இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் இடையே இயக்கப்பட்டது.
3-வது கட்டமாக முழுவதும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. நேரு பூங்கா-திருமங்கலம் இடையே கடந்த ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேரு பூங்கா-எழும்பூர்-சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுற்று பயணிகள் சேவை தொடங்குவதற்கு தயாராக்கப்பட்டன. அதே போல சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை ஏ,ஜி. டி.எம்.எஸ். இடையே பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.
பின்னர் சுரங்கப்பாதை யில் எழும்பூர்- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள்.
விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் துர்கா சங்கர் மிஷ்ரா, பங்கஜ் குமார் பன்சல், டி.வி.சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதால் இனி சென்ட்ரலில் இருந்து நேரடியாக மீனம்பாக்கத்திற்கு செல்ல முடியும். #ChennaiMetro #CMOpenMetro
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நிறைவேற்றப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல்- கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை ஒரு வழியாகவும், சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மார்க்கமாக மற்றொரு வழியாகவும் செயல்படுத்தப்படுகிறது.
உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை என 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் திட்டம் முதன் முதலாக கோயம்பேடு- அசோக்நகர் இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் இடையே இயக்கப்பட்டது.
3-வது கட்டமாக முழுவதும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. நேரு பூங்கா-திருமங்கலம் இடையே கடந்த ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேரு பூங்கா-எழும்பூர்-சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுற்று பயணிகள் சேவை தொடங்குவதற்கு தயாராக்கப்பட்டன. அதே போல சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை ஏ,ஜி. டி.எம்.எஸ். இடையே பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
இதையொட்டி எழும்பூர்- சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா இன்று நடந்தது.
பின்னர் சுரங்கப்பாதை யில் எழும்பூர்- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள்.
விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் துர்கா சங்கர் மிஷ்ரா, பங்கஜ் குமார் பன்சல், டி.வி.சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதால் இனி சென்ட்ரலில் இருந்து நேரடியாக மீனம்பாக்கத்திற்கு செல்ல முடியும். #ChennaiMetro #CMOpenMetro
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X