என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் சென்ற விமானத்தில் கோளாறு- மதுரையில் அவசரமாக தரையிறக்கம்
Byமாலை மலர்24 May 2018 1:05 PM GMT (Updated: 24 May 2018 1:05 PM GMT)
விஜயகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ThoothukudiShooting #VijayakanthFlight
மதுரை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் மகளிரணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அந்த விமானத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 65 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் மதுரையை நெருங்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, மதுரை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கு அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், மதுரையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த விஜயகாந்த், பிரேமலதா, சசிகலா புஷ்பா எம்.பி. உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
முன்னதாக, துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #ThoothukudiShooting #VijayakanthFlight
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X