search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே ரெயிலில் இருந்து தள்ளி வாலிபர் கொலை?: போலீசார் விசாரணை
    X

    அரியலூர் அருகே ரெயிலில் இருந்து தள்ளி வாலிபர் கொலை?: போலீசார் விசாரணை

    உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விருதாச்சலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்த வாலிபரின் சட்டை பையில் ஐ.டி. கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் அவரது பெயர் மகேந்திரன் எனவும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும்  திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தாம்பரம் செல்வதற்காக எடுக்கப்பட்ட டிக்கெட்டும் இருந்தது.  அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவரது செல்போனின் முகப்பு படத்தில் இளம்பெண் ஒருவரின் திருமண புகைப்படம் உள்ளது. இதனால் மகேந்திரனுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் ரெயிலில் இருந்து தள்ளி அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×