என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்21 May 2018 4:56 PM GMT (Updated: 21 May 2018 4:56 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.
அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.
அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X