search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையத்தில் ஆட்டோ மீது பஸ் ஏறி டிரைவர் பலி
    X

    பெரியநாயக்கன்பாளையத்தில் ஆட்டோ மீது பஸ் ஏறி டிரைவர் பலி

    பெரியநாயக்கன்பாளையத்தில் இன்று காலை பாலம் அருகே ஆட்டோ மீது பஸ் ஏறியது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

    கவுண்டம்பாளையம்:

    நாகர்கோவிலில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டோபர் ஓட்டினார். இன்று காலை பெரியநாயக்கன் பாளையம் பஸ் நிலையம் அருகே பஸ் வந்தது.

    அப்போது எதிரே மேட்டுப்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். அங்குள்ள பாலம் அருகே வந்தபோது ஆட்டோ மீது பஸ் ஏறியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. அதில் சிக்கிய பாலசுப்பிரமணியம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து பஸ்சை பறிமுதல் செய்தனர். பயணிகள் மாற்றுபேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×