என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்19 May 2018 5:39 PM GMT (Updated: 19 May 2018 5:39 PM GMT)
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 18). இவர் ராயக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில் பிரபாகரன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் பிரபாகரன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாணவரின் தந்தை கோவிந்தசாமி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 18). இவர் ராயக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில் பிரபாகரன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் பிரபாகரன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாணவரின் தந்தை கோவிந்தசாமி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X