search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் போலீஸ் அதிரடி- மணல் கடத்திய 22 பேர் கைது
    X

    நெல்லை மாவட்டத்தில் போலீஸ் அதிரடி- மணல் கடத்திய 22 பேர் கைது

    நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 22 பேரை கைது செய்த போலீசார் 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்திய கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

    மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள்.#tamilnews
    Next Story
    ×