என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் போலீஸ் அதிரடி- மணல் கடத்திய 22 பேர் கைது
Byமாலை மலர்18 May 2018 8:56 AM GMT (Updated: 18 May 2018 8:56 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 22 பேரை கைது செய்த போலீசார் 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்திய கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.
மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள்.#tamilnews
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்திய கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.
மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X