search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை ரூ.5 அதிகரிக்கலாம்- தினந்தோறும் சிறிது சிறிதாக விலையை உயர்த்த திட்டம்
    X

    பெட்ரோல் விலை ரூ.5 அதிகரிக்கலாம்- தினந்தோறும் சிறிது சிறிதாக விலையை உயர்த்த திட்டம்

    கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்களாக விலை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தில் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் சிறிது சிறிதாக உயர்த்தி ரூ.5 வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. #Petrol #Diesel
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல்-டீசல் விலை உயராமல் இருந்தது.

    தேர்தலின் போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டால் அது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணை நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தன.

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

    ஒவ்வொரு நாளும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை விவரம் வருமாறு:-


    கடந்த 5 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 3 காசு, டீசல் 1 ரூபாய் 23 காசு உயர்ந்துள்ளது.

    இதுபற்றி நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூ‌ஷனல் இக்விட்டிஸ் கூறுகையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் என்று அறிவித்துள்ளது.

    ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் நிறுவனம் கூறுகையில் பெட்ரோல்-டீசல் விலையை அண்மையில் 20 நாட்களாக உயர்த்தாமல் இருந்ததால் தங்களுக்கு லிட்டருக்கு 31 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. #Petrol #Diesel
    Next Story
    ×