search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது
    X

    திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது

    திருமானூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பாளையபாடியில் திருமானூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது கரைவெட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×