search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே வாகன சோதனை: தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்
    X

    மானாமதுரை அருகே வாகன சோதனை: தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்

    மானாமதுரை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மாங்குடி விலக்கில் சிப்காட் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை நிற்குமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாகச் சென்றனர். எனவே போலீசார் அவர்களை தங்கள் ஜீப்பில் விரட்டினர்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை மடக்கி 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய கோட்டையைச் சேர்ந்த பிரதாப் (வயது 29), வைரம் பட்டியைச் சேர்ந்த கனிராஜா (26), சிவகங் கையைச் சேர்ந்த சசிகுமார் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும், ஜாமீனில் வெளி வந்த இவர்கள் அதன் பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×