search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் சாந்தா தகவல்
    X

    பெரம்பலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் சாந்தா தகவல்

    பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எரிவாயு உருளைகள் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக, எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (18.05.2018) பிற்பகல் 4 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின், மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×