search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் பொதுக்கூட்டம்
    X

    கந்தர்வக்கோட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் பொதுக்கூட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வீராச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை அரசியல் விளக்கவுரையாற்றினார். அவரிடம் கிளையின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணி, சித்திரைவேல், பன்னீர் செல்வம், இளையராஜா, சங்கிலிமுத்து, மில்லர், நாராயணசாமி, கிளைச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×