என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரையூர் அருகே ஊரணியில் தவறி விழுந்த விவசாயி பலி
Byமாலை மலர்16 May 2018 9:09 AM GMT (Updated: 16 May 2018 9:09 AM GMT)
பேரையூர் அருகே குளிக்க சென்ற விவசாயி ஊரணியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
பேரையூர்:
திருமங்கலம் மாவட்டம், பேரையூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குருவு (வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை சாப்டூர் அருகே கேணி என்ற பகுதியில் உள்ள ஊரணியில் குளிக்க சென்றார்.
ஊரணி கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்த போது திடீரென்று குருவு வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது.
ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X