search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரையூர் அருகே ஊரணியில் தவறி விழுந்த விவசாயி பலி
    X

    பேரையூர் அருகே ஊரணியில் தவறி விழுந்த விவசாயி பலி

    பேரையூர் அருகே குளிக்க சென்ற விவசாயி ஊரணியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மாவட்டம், பேரையூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குருவு (வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை சாப்டூர் அருகே கேணி என்ற பகுதியில் உள்ள ஊரணியில் குளிக்க சென்றார்.

    ஊரணி கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்த போது திடீரென்று குருவு வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது.

    ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×