என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி விவகாரத்தில் பதிலளிக்காமல் காமெடி பண்ணிய அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்15 May 2018 2:40 AM GMT (Updated: 15 May 2018 2:40 AM GMT)
காவிரி விவகாரத்தில் பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தனது துறை கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என சிரித்தபடி கூறியுள்ளார்.#Sellurraju #ADMK
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த வாரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அவரால்(ரஜினிகாந்த்) காரைக்குடி ‘ஆச்சியை’ தான் பிடிக்க முடியும். தமிழ்நாடு ஆட்சியை பிடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
காரைக்குடி ஆச்சி பற்றிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நகரத்தார் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்தநிலையில் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஏற்கனவே நான் கேசுவலாக(காரைக்குடி ஆச்சி) சொன்னதை போய் என்னை மாட்டிவிட்டீர்கள். எனவே வாங்க தலைவரே(கையெடுத்து கும்பிடுகிறார்). எனது துறை சம்பந்தமான கேள்விகள் இருந்தால் மட்டும் கேளுங்கள்’ என்று சிரித்தபடி கூறிவிட்டு, காவிரி விவகாரம் பற்றி பதில் அளிக்காமல் சென்று விட்டார். #Sellurraju #ADMK
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த வாரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அவரால்(ரஜினிகாந்த்) காரைக்குடி ‘ஆச்சியை’ தான் பிடிக்க முடியும். தமிழ்நாடு ஆட்சியை பிடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
காரைக்குடி ஆச்சி பற்றிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நகரத்தார் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்தநிலையில் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஏற்கனவே நான் கேசுவலாக(காரைக்குடி ஆச்சி) சொன்னதை போய் என்னை மாட்டிவிட்டீர்கள். எனவே வாங்க தலைவரே(கையெடுத்து கும்பிடுகிறார்). எனது துறை சம்பந்தமான கேள்விகள் இருந்தால் மட்டும் கேளுங்கள்’ என்று சிரித்தபடி கூறிவிட்டு, காவிரி விவகாரம் பற்றி பதில் அளிக்காமல் சென்று விட்டார். #Sellurraju #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X