search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    தர்மபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்கள் பறிமுதல்

    தர்மபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி குப்பாண்டி தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 61). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பச்சையப்பன் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 420 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் ரூ.50 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக பச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×