search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடம் கட்ட எந்த தடங்கலும் செய்யக்கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    ஜெயலலிதா நினைவிடம் கட்ட எந்த தடங்கலும் செய்யக்கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சி உறுதியாக ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி ஏற்பட்டவுடன் தமிழக விவகாரத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படும். ஆட்சி அமைந்து ஒரு மாதம் கழித்து கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்தின் நிலவரத்தையும், தமிழக மக்களின் உணர்வையும் எடுத்து கூறி தெளிவாக பேசுவேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது.


    குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பாவி மக்களை தாக்குவோர் மீது நியாயமான முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    Next Story
    ×