search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழு அறிக்கை வெளியிட ஐகோர்ட் தடை
    X

    நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழு அறிக்கை வெளியிட ஐகோர்ட் தடை

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழு தனது விசாரணை அறிக்கையை வெளியிட சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்தது. #NirmalaDevi #Santhanam
    சென்னை:

    அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்த குழு தனது விசாரணை அறிக்கையை 12-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.



    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை வெளியிட தடை விதித்து உள்ளது. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #NirmalaDevi #Santhanam
    Next Story
    ×