என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவு
Byமாலை மலர்10 May 2018 7:30 AM GMT (Updated: 10 May 2018 7:30 AM GMT)
சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், தனது புதிய கட்சிக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசாவிட்டாலும், நதிகள் இணைப்பு குறித்த அவரது கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 32 மாவட்ட செயலாளர்களுடனும் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கினார்.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்கள் கூறும்போது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றதாகவும், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தனர். ஜூன் 2 ஆம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரஜினி அறிவுறுத்தியிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசாவிட்டாலும், நதிகள் இணைப்பு குறித்த அவரது கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 32 மாவட்ட செயலாளர்களுடனும் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கினார்.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்கள் கூறும்போது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றதாகவும், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தனர். ஜூன் 2 ஆம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரஜினி அறிவுறுத்தியிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Rajinikanth #RajiniMakkalMandram
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X