என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்9 May 2018 11:52 AM GMT (Updated: 9 May 2018 11:52 AM GMT)
பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் டிராக்டரில் பிளிக்கல் பாளையம் காவிரி ஆற்றில் நள்ளிரவு மணல் அள்ளிக் கொண்டு அய்யம்பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.
அப்போது கரட்டூர் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜேடர் பாளையம் போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த மணலை அரசு அனுமதி இல்லாமல் அள்ளி, திருட்டு தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.
அவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நள்ளிரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திருட்டு தனமாக வாகனங்களில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X