என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 75 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்7 May 2018 7:27 AM GMT (Updated: 7 May 2018 7:27 AM GMT)
ஆந்திராவிலிருந்து காஞ்சீபுரம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 75 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக காஞ்சீபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும்போலீசார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி வந்த சந்தேகத்திற்குரிய காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் 75 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நிலக்கோட்டையைச் சேர்ந்த கதிரேசன் (45) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கதிரேசனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.#tamilnews
ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக காஞ்சீபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும்போலீசார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி வந்த சந்தேகத்திற்குரிய காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் 75 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நிலக்கோட்டையைச் சேர்ந்த கதிரேசன் (45) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கதிரேசனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X