என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூடலூர் அருகே முல்லை பெரியாற்றில் கடத்தல் மணல் குவியல்
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றில் இருந்தும் வனப்பகுதி ஓடைகளில் இருந்தும் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தி வருகிறார்கள். சிலர் மணல்களை முல்லைப் பெரியாற்றில் கரை ஓரங்களில் குவியல் குவியலாக அள்ளி பதுக்கி வைக்கிறார்கள்.
அவ்வாறு பதுக்கி வைத்த மணல்களை இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் கடநத்தி செல்கிறார்கள். ஆறு மற்றும் ஓடைகளில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதன் எதிரொலியாக விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
கூடலூர் குருனூத்து அருகே முல்லைப் பெரியாற்றில் பல்வேறு இடங்களில் கடத்துவதற்காக குவியல் குவியலாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை கடத்துபவர்கள் மீது வருவாய்துறையினரோ, போலீசாரோ இதுவரை நடடிவக்கை எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்