search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்
    X

    தேனி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்

    தேனி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாலார் பட்டி முல்லையாற்றுப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக டிராக்டரில் ஒருவர் மணல் கடத்திக் கொண்டு இருந்தார்.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்ற பொழுது மணல் கடத்தியவர் தப்பி ஓடினார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வண்டி எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர் பாலார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×