search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருட்டு
    X

    சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருட்டு

    சேலம் அம்மாப்பேட்டையில் விசைத்தறி கூடத்தில் ரூ. 4 லட்சம் பொருட்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகரில் கணேசன் (வயது 35) என்பவர் விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். இந்த விசைத்தறி கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

    இந்த நிலையில் விசைத்தறி கூடத்தில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் கார்டு-22 உள்பட ரூ.4 லட்நத்து 4 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×