search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலின்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் - ஸ்டாலின்
    X

    தேர்தலின்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் - ஸ்டாலின்

    மூன்றாவது அணி தொடர்பாக தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்புக்கு பின் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். #ChandrashekarRao #MKStalin #ThirdFront

    சென்னை:

    காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.

    இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

    இதனை அடுத்து, சந்திரசேகர் ராவ் ஸ்டாலின் உடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாலினுடன், சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தினார். 

    ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் என்னிடம் விவாதித்தார். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி போன்றவற்றை குறித்து இருவரும் விவாதித்தோம். 
    ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். இது முதற்கட்ட சந்திப்பு, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இது குறித்து பேச உள்ளேன். அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடன் ஆலோசனை நடத்தினேன்.

    இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது:-

    மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும், அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். 2004-ம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை தற்போது சந்தித்து பேசினேன். 3-வது, 4-வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை; நாங்கள் 3-வது அணி இல்லை. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்பட வில்லை. எனது சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். மத்திய, மாநில அரசு உறவுகள், மாநில சுயாட்சி குறித்தும், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலினுடன் விவாதித்தேன்.  

    இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார். #ChandrashekarRao #MKStalin #ThirdFront
    Next Story
    ×