search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த சென்னை - நெல்லை அந்தோத்யா ரெயில் ஒத்திவைப்பு
    X

    பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த சென்னை - நெல்லை அந்தோத்யா ரெயில் ஒத்திவைப்பு

    முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட சென்னை - நெல்லை அந்தோத்யா ரெயில் 27-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    சென்னை தாம்பரம் - நெல்லை, சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே இரு மார்க்கமாக முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட அந்தோத்யா ரெயில் தினசரி இயக்கப்படும் என கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வரும் 27-ம் தேதி தாம்பரம் - நெல்லை இடையே அந்தோத்யா ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் அந்தோத்யா ரெயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட ரெயில் ரத்து செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #SouthernRailway
    Next Story
    ×