search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமுளி அருகே பெண்ணை தாக்கிய கும்பல்
    X

    குமுளி அருகே பெண்ணை தாக்கிய கும்பல்

    குமுளி அருகே பெண்ணை தாக்கிய கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    குமுளி அருகே வெட்டுக்காடு ஊமையன்தொழு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி ஜோதி(வயது33). இவரது உறவினர் செந்தாமரைக்கும் அதேபகுதியை சேர்ந்த மலையான் என்பவருக்கும் விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று செந்தாமரையை, மலையன், செந்தில்குமார், பிரியா, மஞ்சுளா ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை தட்டிகேட்ட ஜோதியையும் மிரட்டி தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து குமுளி போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே அகமலை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியப்பன் மனைவி மகாலட்சுமி(35). இருவரும் தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். தங்கராஜின் தம்பி ராமகிருஷ்ணன் முன்விரோதத்தில் தங்கராஜ் தோட்டத்தை சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதற்கு சாட்சி சொன்ன மகாலட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

    Next Story
    ×