என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்24 April 2018 5:55 PM GMT (Updated: 24 April 2018 5:55 PM GMT)
தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தேனி:
29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த வாகன விழிப்புணர்வு பேரணி தேனியில் நடந்தது. தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பேரணியை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை அவர் வழங்கினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகமது, தாசில்தார் சத்தியபாமா, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு அடைந்தது.
இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி வாகனங்களும், ஹெல்மெட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் பேரணியாக சென்றனர்.
29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த வாகன விழிப்புணர்வு பேரணி தேனியில் நடந்தது. தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பேரணியை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை அவர் வழங்கினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகமது, தாசில்தார் சத்தியபாமா, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு அடைந்தது.
இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி வாகனங்களும், ஹெல்மெட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் பேரணியாக சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X