என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே வியாபாரி படுகொலை
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி. திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). ஆந்திராவில் கவரிங் நகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்கள் ஆந்திராவில் தங்கி வியாபாரம் செய்து வந்தனர். மாதத்துக்கு ஒருமுறை நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள பெற்றோரை பார்க்க ஜெகன் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
கடந்த 21-ந் தேதி ஜெகன், குடும்பத்துடன் பெற்றோரை பார்க்க இங்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் மாடியில் ஜெகன் மட்டும் இருந்தார். வீட்டில் உள்ள அறையில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஜெகனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் குட்டா கார்த்திக் உள்பட 10 பேர் வீட்டுக்கு வந்தனர். ஜெகன் மாடியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.
திடீரென ஜெகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. ஆத்திரம் அடைந்த நண்பர்கள் ஜெகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் பரிதாபமாக இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மாடிக்கு வந்து பார்த்தனர். அப்போது ஜெகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகன் நண்பர்களுடன் மது அருந்த சென்று உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.
இந்த மோதலில் ஜெகனை நண்பர்களே தீர்த்து கட்டி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக குட்டா கார்திக் உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். குட்டா கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்