search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெசன்ட் நகரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களுக்கு தர்மஅடி
    X

    பெசன்ட் நகரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களுக்கு தர்மஅடி

    சென்னை பெசன்ட் நகரில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்களை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    திருவான்மியூர்:

    சென்னை, பெசன்ட்நகர் ஓடைக்குப்பம், வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரகுபதி. நேற்று இரவு அவர் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.

    நள்ளிரவில் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.

    சத்தம் கேட்டு எழுந்த ரகுபதி கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார், வசந்த் என்பது தெரிந்தது.

    சென்னை செனாய்நகர் 8-வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் மாரியப்பராஜ். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    இதேபோல் அருகில் உள்ள மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
    Next Story
    ×