search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலியார்பேட்டையில் என்ஜினீயரிங் மாணவி கடத்தல்
    X

    முதலியார்பேட்டையில் என்ஜினீயரிங் மாணவி கடத்தல்

    முதலியார்பேட்டையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை சேர்ந்த அரசு ஊழியர். மகள் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும்மாணவி இல்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் மாணவியை வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக கூறி உள்ளனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×