என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்22 April 2018 5:58 PM GMT (Updated: 22 April 2018 5:58 PM GMT)
பாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், விவசாயி. இவருடைய மகன் ராஜவேலு (வயது 15). இவன் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் படித்து வந்தான். மாணவன் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடன் விளையாடி வந்துள்ளான். இதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவன் ராஜவேலு வீட்டில் விஷம் குடித்தான். தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெற்றோர் மாலை வீட்டுக்கு வந்த போது ராஜவேலு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது ராஜவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், விவசாயி. இவருடைய மகன் ராஜவேலு (வயது 15). இவன் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் படித்து வந்தான். மாணவன் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடன் விளையாடி வந்துள்ளான். இதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவன் ராஜவேலு வீட்டில் விஷம் குடித்தான். தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பெற்றோர் மாலை வீட்டுக்கு வந்த போது ராஜவேலு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது ராஜவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X