என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழியில் 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு- பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்
Byமாலை மலர்21 April 2018 2:40 PM GMT (Updated: 21 April 2018 2:40 PM GMT)
பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் சீர்காழியில் 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பை பி.வி.பாரதி எம்.எல்.ஏ வழங்கினார்.
சீர்காழி:
பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடுப்புடன் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி பி.வி.பாரதி எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது.
சீர்காழி தாசில்தார் பாலமுருகன், முன்னிலை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி பங்கேற்று 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றுடன் கூடிய கியாஸ் இணைப்பை வழங்கி பேசுகையில், மத்தியஅரசு கிராமப்புற வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பாதுகாப்பாக கியாஸ் அடுப்பை பயன்படுத்தி, மாசு இல்லா நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, மாவட்ட பேரவை செயலாளர் கே.எம்.நற்குணன், பேரூர் செயலாளர் போகர்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்டேன் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் உதயக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பாக கியாஸ் அடுப்பினை உபயோகிப்பது குறித்தும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் செயல்முறை விளக்கத்தினை சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் செய்து காட்சினார். #tamilnews
பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடுப்புடன் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி பி.வி.பாரதி எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது.
சீர்காழி தாசில்தார் பாலமுருகன், முன்னிலை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி பங்கேற்று 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றுடன் கூடிய கியாஸ் இணைப்பை வழங்கி பேசுகையில், மத்தியஅரசு கிராமப்புற வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பாதுகாப்பாக கியாஸ் அடுப்பை பயன்படுத்தி, மாசு இல்லா நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, மாவட்ட பேரவை செயலாளர் கே.எம்.நற்குணன், பேரூர் செயலாளர் போகர்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்டேன் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் உதயக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பாக கியாஸ் அடுப்பினை உபயோகிப்பது குறித்தும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் செயல்முறை விளக்கத்தினை சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் செய்து காட்சினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X