search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
    X

    சிவகாசியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    சிவகாசியில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் இறந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    சிவகாசி ஜவுளிக்கடை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது16). 10-ம் வகுப்பு தேர்வை டுடோரியல் மூலம் எழுதியுள்ளான்.

    இன்று பராசக்தி காலனி யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரேடியோ கட்ட உதவியாளராக முத்துப்பாண்டி சென்றான். உயரமான கம்பத்தில் ஏறி முத்துப்பாண்டி ஸ்பீக்கர் கட்ட முயன்றான்.

    அப்போது உயரே சென்ற மின் கம்பியில் அவனது கை பட்டுவிட்டது. இதில் மின்சாரம் தாக்கிய முத்துப்பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து சிவகாசி டவுண் போலீஸ் நிலையத் திற்கு தகவல் கொடுக்கப் பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×