என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்
Byமாலை மலர்21 April 2018 11:03 AM GMT (Updated: 21 April 2018 11:03 AM GMT)
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடைவிதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.
ஆனால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி கோர்ட்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான கூட்டுறவு சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC #Tamilnews
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடைவிதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.
ஆனால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி கோர்ட்டுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான கூட்டுறவு சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X