search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கத்தில் செருப்பு வீச்சு - நாம் தமிழர் கட்சியினர் 8 பேருக்கு ஜாமீன்
    X

    சேப்பாக்கத்தில் செருப்பு வீச்சு - நாம் தமிழர் கட்சியினர் 8 பேருக்கு ஜாமீன்

    ஐ.பி.எல். போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்து சிறைசென்ற நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் ஜாமீனில் விடுதலையானார்கள்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் போது எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளை வீசினர். அதோடு கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். இது தொடர்பாக 11 பேர் கைதானார்கள்.

    கைதானவர்களில் பிரபாகரன் காமராஜ், பொன்னுவேல், மகேந்திரன், ராஜ்குமார், சுகுமார், ஆல்பர்ட், ஏகாம்பரம், மார்ட்டின் ஆகிய 8 பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். இதேபோல போராட்டத்தில் கைதான ஸ்டாலின் என்பவரும் ஜாமீனில் விடுதலையானார். #tamilnews

    Next Story
    ×