search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே ஆம்புலன்ஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
    X

    திருவையாறு அருகே ஆம்புலன்ஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

    திருவையாறு அருகே ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறு அருகே உள்ள ஆச்சிநாதபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் யோகேஸ்வரன் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு லோடு ஆட்டோவை ஓட்டி கொண்டு அரசூர் மெயின்ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் நடுக்காவேரி போலீசார் விரைந்து சென்று பலியான யோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×