search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சிறுபான்மை பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சிறுபான்மை பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கிறிஸ்தவ தேவாலயங்கள், மதபோதகர்கள், சிறு பான்மை பிரிவினர் தாக்கப்படுவதை கண்டித்தும், தகுந்த பாதுகாப்பு அளிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வின்சென்ட் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ராபர்ட் ரஜினிகாந்த், சாலமோன் செல்வராஜ், பிரின்ஸ் பக்தசிங், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், அருள்ஜோதி, டாக்டர் முஸ்தபா, அப்துல் மஜீத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×