search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல்- திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சம்
    X

    சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல்- திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சம்

    காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து திருவள்ளூர் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைத்துள்ளனர்.
    திருவள்ளூர்:

    பொன்னேரியை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மாலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களது திருமணத்துக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் பயந்து போன காதல்ஜோடி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது மாலை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் போந்தவாக்கத்தில் குடியிருந்து வருகிறோம். பட்டதாரியான நான் எனது அத்தை மகனான கண்ணனும் நானும் காதலித்து வந்தோம். இருவரும் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தும் வருகிறோம்.

    கண்ணன் குடும்பத்தினர் என வீட்டிற்கு பெண் கேட்டு வந்தனர். ஆனால் எனது கணவர் ஏழ்மையான நிலையில் இருப்பதால் என் பெற்றோர் அவர்களை உதாசீனம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நாங்கள் ஸ்ரீபெருமந்தூரில் உள்ள கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.

    இதையறிந்த எனது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும், அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். என்னால் கிராமத்தில் என் கணவருடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    Next Story
    ×