search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி
    X

    மாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி

    பாலியல் வலை விரித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்கு சேலை மற்றும் சுடிதார்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை மயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    இப்படியும் ஒரு பேராசிரியையா? என்று எல்லோரையும் மிரள வைத்திருக்கிறார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. ஒரு குருவாக இருந்து நீதி போதனைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டிய உயர்ந்த இடத்தில் இருந்த நிர்மலா தேவி இப்போது நீதி தேவதையின் முன்னால் குற்றவாளி கூண்டில் நின்றபடியே சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

    நிர்மலாதேவி பதிவாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையிலேயே மாணவிகளுக்கு செக்ஸ் வலை விரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. போலீஸ் விசாரணையில் தோண்ட தோண்ட வரும் புதையல் போல புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நிர்மலாதேவியின் செக்ஸ் வேட்டை பற்றியும் அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்த நிர்மலாதேவி அதனை மதுரை பல்கலைக்கழகத்துக்கு மாற்றி அங்கு வைத்தே ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டபடிப்பை படித்த தனது முன்னாள் கல்லூரி தோழர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக 2 பேராசிரியர்கள், அதிகாரி ஒருவருடனும் நிர்மலாதேவிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 5-ந்தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த நிர்மலாதேவிக்கு பல்கலைக்கழக தங்கும் விடுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

    அப்போது பல்கலைக்கழக அதிகாரிகள் பலர் நிர்மலா தேவியை சந்தித்து பேசினர். அந்த நேரத்தில் தான் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் நிலை அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் நிர்மலாதேவியிடம் முனைவர் பட்டவழிகாட்டி மற்றும் பதிவாளர் பதவியை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

    இதற்கு அந்த அதிகாரி மாணவிகளையே விலையாக கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்பின்னரே நிர்மலாதேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில் தேவைக்கேற்ப தன்னிடம் பணம் இருந்தும் பதவி ஆசையாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்றும் நிர்மலாதேவி கூறியுள்ளார்.

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 3 கோஷ்டியினர் செயல்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கோஷ்டியினர் தன்னை இதுபோன்று சிக்கவைத்து விட்டதாகவும் நிர்மலாதேவி போலீஸ் விசாரணையின் போது கூறியுள்ளார்.

    இதற்கு முன்னர் பலமுறை மாணவிகளிடம் போனில் பேசி இருக்கிறேன். ஆனால் இப்போது வேண்டுமென்றே நான் பேசிய ஆடியோவை வெளியிட்டு விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நிர்மலாதேவி அழகான ஏழை மாணவிகள் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை கொட்டியுள்ளார். எப்போதும் அவர்களிடம் நன்றாக பேசி குடும்ப சூழலை புரிந்துகொண்டு அதுபோன்ற மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தையும் அவரே கட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதேநேரத்தில் தனது சொகுசுகாரில் மாணவிகள் சிலரை மதுரைக்கு ஷாப்பிங் அழைத்துச் சென்றும் நிர்மலாதேவி ஆசைகாட்டி உள்ளார்.

    அப்போது சேலை- சுடிதார் ஆகியவற்றை எடுத்து கொடுத்தும் மயக்கி உள்ளார். தங்கள் மீது கொண்ட அன்பால் வி‌ஷயம் புரியாமல் பேராசிரியை நிர்மலாதேவியின் இது போன்ற அன்பளிப்புகளை மாணவிகள் பெற்றுள்ளனர். இப்படி மாணவிகளின் இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நிர்மலாதேவி திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நிர்மலாதேவியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்பது பற்றி முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் பதுங்கி இருக்கும் செக்ஸ் பூதங்கள் இனி... ஒவ்வொன்றாய் வெளிவரும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. #NirmalaDevi
    Next Story
    ×