என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை ஏன் உயர்த்தக் கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி
Byமாலை மலர்20 April 2018 9:41 AM GMT (Updated: 20 April 2018 9:41 AM GMT)
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை ஏன் உயர்த்தக் கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை:
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
2017-18ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்க தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு மாதம்தோறும் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகை தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையை கொண்டு மீனவர்கள் தங்களின் அன்றாட குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் நிவாரணத்தொகையாக வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் பின்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை ஏன் உயர்த்த கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
2017-18ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்க தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு மாதம்தோறும் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகை தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையை கொண்டு மீனவர்கள் தங்களின் அன்றாட குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் நிவாரணத்தொகையாக வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் பின்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை ஏன் உயர்த்த கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X