search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சனை: இந்திய கம்யூ. 23-ந்தேதி மனித சங்கிலி போராட்டம்- முத்தரசன் அறிக்கை
    X

    காவிரி பிரச்சனை: இந்திய கம்யூ. 23-ந்தேதி மனித சங்கிலி போராட்டம்- முத்தரசன் அறிக்கை

    காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் துரோகத்தை கண்டித்து வருகிற 23-ம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தபோவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் துரோகத்தை கண்டித்தும், இத்துரோகத்திற்கு துணை போகும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியன அமைத்திட வலியுறுத்தியும் வரும் 23-ந்தேதி மாலை 4 மணி முதல் 5 மணிவரை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

    மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெற்று, மனித சுவர் அமைத்து, நமது உணர்வையும், உரிமையையும் வெளிப்படுத்திட வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×