search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை
    X

    பெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை

    எச். ராஜா கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பெண்களை இழிவுப்படுத்த கூடாது என கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
    பீளமேடு:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று கோவை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் தனது டுவிட்டரில் கருத்து சொல்லி இருக்கிறாரே என கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு தம்பித்துரை பதில் அளிக்கும் போது டுவிட்டரை நான் பார்க்கவில்லை . அதனால் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து எச். ராஜா தனது டுவிட்டரில் இழிவாக கருத்து தெரிவித்து உள்ளாரே? என நிருபர்கள் கேட்ட போது அதற்கும் நான் டுவிட்டரை பார்க்கவில்லை என கூறினார்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறி வருகிறார்களே? என கேட்ட போது, பெண்களை இழிவுப்படுத்த கூடாது என்பதே என் கருத்து. இந்த மாதிரியான வி‌ஷயத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

    பெண் ஆளுமை உள்ள கட்சியில் இருந்து வந்த நீங்கள், இந்த வி‌ஷயத்தில் கண்டனம் கூட தெரிவிக்க முடியாமல் உங்களை தடுப்பது எது? ஏன் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தம்பித்துரை பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.
    Next Story
    ×