search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்துக்கு திருநாவுக்கரசர் நாளை வருகை
    X

    நெல்லை மாவட்டத்துக்கு திருநாவுக்கரசர் நாளை வருகை

    நெல்லை மாவட்டத்துக்கு நாளை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருகிறார். காங்கிரஸ் கட்சியின் 3 மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), பழனி நாடார் (மேற்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவர், நெல்லை மாவட்டத்துக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார். காங்கிரஸ் கட்சியின் 3 மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

    காலை 9 மணிக்கு வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள எஸ்.வி.பி. திருமண மண்டபத்தில் நடைபெறும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசுகிறார். பிற்பகல் 2 மணிக்கு பாளை நேரு சிறுவர் கலையரங்கம் எதிரே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள எஸ்.ஆர்.ஆர். மஹாலில் நடக்கிறது. கூட்டத்திற்கு திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×