என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ரிங் ரோடு அருகே வட மாநிலத்தை சேர்ந்த ராம்தேவ் என்பவர் ஹார்டுவேர் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 11 மணி அளவில் அவரது கடையில் இருந்து திடீரென தீப்பிடித்து புகை குபு குபு வென வெளியே வந்தது.
இதனை கண்டு பொதுமக்கள் உடனடியாக ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடையின் நாலாபுறமும் பீய்ச்சி அடித்தார்கள். இதனை தொடர்ந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த பொருட்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் தீ மெல்ல மெல்ல அணைந்தது.
இவ்வாறு வீரர்கள் பல மணி நேரம் போராடி அக்கம் பக்கத்தில் பரலாமல் தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது.
இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்