என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓடும் பஸ்சில் நகை திருட்டு: கைக்குழந்தையுடன் 2 பெண்கள் கைது
ஒரத்தநாடு:
தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அப்போது கைக் குழந்தையுடன் 2 பெண்கள் அந்த பஸ்சில் ஏறினர். இதைத்தொடர்ந்து பஸ் தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை அருகே சென்ற போது பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் இந்த குழந்தையை சிறிது நேரம் வைத்திருங்கள் என்று அந்த 2 பெண்கள் கொடுத்தனர்.
அப்போது அந்த பெண் பயணியின் காதில் கிடந்த 4 பவுன் தங்க கம்மலை அவர்கள் திருடி விட்டனர். பின்னர் பஸ் ஒரத்தநாடு அருகே உள்ள உளூர் பகுதியில் சென்ற போது தன்னுடைய கம்மல் திருட்டு போனதை தெரிந்து கொண்ட அந்த பெண் பஸ்சில் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பெண்களையும் பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில் அவர்கள் திருச்சி சமயபுரம் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி. இந்திரா (வயது 29), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரகு என்பவர் மனைவி அமலா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து கைக்குழந்தையுடன் வந்த இந்திரா, அமலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்