என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி, கனிமொழி பற்றி விமர்சனம் - எச்.ராஜாவுக்கு தலைவர்கள் கண்டனம்
Byமாலை மலர்19 April 2018 9:50 AM GMT (Updated: 19 April 2018 9:50 AM GMT)
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தேசிய தலைவர் எச். ராஜாவிற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி:-
எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார். தி.மு.க. தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் தரம் தாழ்த்தி பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எச்.ராஜா எதை பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்சினைகள் நீர்த்து போகாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
“பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தொடர்ந்து கீழ்த்தரமாக பேசி வருகிறார். அவர் திருந்துவதாக தெரியவில்லை. வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது பேச்சு உள் ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் இதுபோன்று செயல்படுவது அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லதல்ல.
நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும். மத்திய அரசு அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
“அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கவர்னர் அவசர அவசரமாக விசாரணை கமிஷனை அமைத்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிவதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கருணாநிதி- கனிமொழி தொடர்பாக எச்.ராஜா வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவு அநாகரீமானது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
“பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் வெளிகொண்டு வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பேராசிரியர் நிர்மலாதேவி இதுபோன்று செயல்பட்டதாக வெளிவந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியலில் எந்த கருத்தாக இருந்தாலும் அது நாகரீகமாக இருக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா:-
எச்.ராஜாவின் இது போன்ற வெறுப்பை உமிழும் பல கருத்துக்களுக்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் மத்திய பாஜகவும் அதன் கைப்பாவையான எடப்பாடி அரசும் எடுக்காததும், மத்தியிலும் பா.ஜ.க. மாநிலத்திலும் பா.ஜ.க. பினாமி ஆட்சி என்ற ஒரே திமிர்தான் எச்.ராஜாவை இதுபோன்று தொடர்ந்து பேசத் தூண்டுகிறது.
பா.ஜ.க. தலைமை, எச்.ராஜாவை இந்தப் பதிவிற்கு மன்னிப்பு கேட்குமாறும், இனிவரும் காலங்களில் தரங்கெட்ட பதிவுகளைப் பதிவு செய்வதும், வெறுப்பு கருத்துக்களைப் பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் எச்.ராஜாவையும் பாஜகவையும் தமிழகத்திலிருந்து துரத்தி அடிப்பார்கள்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர்:-
எச்.ராஜா அநாகரீகமான அரசியலை செய்து வருகிறார். ஒரு தலைவரின் மகளை இதுபோன்று பேசி இருப்பது மிகவும் தவறானது. மத்திய அரசு இதில் தலையிட்டு கண்டிக்க வேண்டும். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறாக விமர்சிக்கக்கூடாது. எனவே எச்.ராஜா இது போன்ற செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
கவர்னரின் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணையை நடத்த வேண்டும். இனி எந்த நம்பிக்கையில் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப முடியும். ஆளுனரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் எச்.ராஜாவுக்கு ஏன் கோபம் வருகிறது. கலைஞர் முதல்-அமைச்சராக இருக்கும்போது இதுபோன்று பேசுவாரா?
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்:-
எச்.ராஜா மனதில் இறைவன் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும். நான் அரசியல்வாதி என்பதைவிட ஆன்மீகவாதி. அந்த வகையில் அவருக்கு மனமாற்றம் ஏற்பட பிரார்த்திக்கிறேன்.
முதல்-அமைச்சர் கேள்வி கேட்க முடியாத இடத்தில் உள்ளார். மத்திய அரசின் பின்னால் அ.தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி:-
எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார். தி.மு.க. தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் தரம் தாழ்த்தி பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எச்.ராஜா எதை பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்சினைகள் நீர்த்து போகாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
“பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தொடர்ந்து கீழ்த்தரமாக பேசி வருகிறார். அவர் திருந்துவதாக தெரியவில்லை. வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது பேச்சு உள் ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் இதுபோன்று செயல்படுவது அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லதல்ல.
நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பதவி விலக வேண்டும். மத்திய அரசு அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
“அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கவர்னர் அவசர அவசரமாக விசாரணை கமிஷனை அமைத்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிவதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கருணாநிதி- கனிமொழி தொடர்பாக எச்.ராஜா வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவு அநாகரீமானது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
“பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் வெளிகொண்டு வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பேராசிரியர் நிர்மலாதேவி இதுபோன்று செயல்பட்டதாக வெளிவந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியலில் எந்த கருத்தாக இருந்தாலும் அது நாகரீகமாக இருக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா:-
எச்.ராஜாவின் இது போன்ற வெறுப்பை உமிழும் பல கருத்துக்களுக்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் மத்திய பாஜகவும் அதன் கைப்பாவையான எடப்பாடி அரசும் எடுக்காததும், மத்தியிலும் பா.ஜ.க. மாநிலத்திலும் பா.ஜ.க. பினாமி ஆட்சி என்ற ஒரே திமிர்தான் எச்.ராஜாவை இதுபோன்று தொடர்ந்து பேசத் தூண்டுகிறது.
பா.ஜ.க. தலைமை, எச்.ராஜாவை இந்தப் பதிவிற்கு மன்னிப்பு கேட்குமாறும், இனிவரும் காலங்களில் தரங்கெட்ட பதிவுகளைப் பதிவு செய்வதும், வெறுப்பு கருத்துக்களைப் பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் எச்.ராஜாவையும் பாஜகவையும் தமிழகத்திலிருந்து துரத்தி அடிப்பார்கள்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர்:-
எச்.ராஜா அநாகரீகமான அரசியலை செய்து வருகிறார். ஒரு தலைவரின் மகளை இதுபோன்று பேசி இருப்பது மிகவும் தவறானது. மத்திய அரசு இதில் தலையிட்டு கண்டிக்க வேண்டும். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறாக விமர்சிக்கக்கூடாது. எனவே எச்.ராஜா இது போன்ற செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
கவர்னரின் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணையை நடத்த வேண்டும். இனி எந்த நம்பிக்கையில் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப முடியும். ஆளுனரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் எச்.ராஜாவுக்கு ஏன் கோபம் வருகிறது. கலைஞர் முதல்-அமைச்சராக இருக்கும்போது இதுபோன்று பேசுவாரா?
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்:-
எச்.ராஜா மனதில் இறைவன் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும். நான் அரசியல்வாதி என்பதைவிட ஆன்மீகவாதி. அந்த வகையில் அவருக்கு மனமாற்றம் ஏற்பட பிரார்த்திக்கிறேன்.
முதல்-அமைச்சர் கேள்வி கேட்க முடியாத இடத்தில் உள்ளார். மத்திய அரசின் பின்னால் அ.தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X